நீண்ட பாரம்பரியத்தை கொண்ட ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம், கடந்த 116 ஆண்டுகளாக எட்ட முடியாத வளர்ச்சியை கடந்த 2019ம் ஆண்டு அடைந்துள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு இந்தியாவின் பங்கும் பெரியளவில் உதவியுள்ளது. 2015ம் ஆண்டு வரை பெரியளவிலான செடான் கார்களை மட்டுமே தயாரிப்பதில் ஆர்வம் காட்டி வந்தது ரோல்ஸ் ராய்ஸ். ஆனால் வாடிக்கையாளர்கள் பலரும் எஸ்யூவி கார்களை வாங்குவதில் ஆர்வம் காட்டினர். இதனால் இந்தியா உட்பட பல்வேறு நாடுகளிலும் எஸ்யூவி கார்களை வாங்குவதில் தான் பெரிய ஆர்வம் இருந்தது. இதனால் தனது பாணியை மாற்றிக் கொள்ள ரோஸ்ல் ராய்ஸ் நிறுவனம் முடிவு செய்தது.
வரலாறு காணாத விற்பனை